Go to full page →

இளைப்பாறுதலின் காலத்திற்காக எதுவும் செய்யாமல் காத்திருத்தல் TamChS 334

சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் தற்போதைய வாய்ப்புகளை ஞானமாகப் பயன்படுத்துவதில்லை; மாறாக, மற்றவர்களுக்கு அறிவூட்டுகிற தங்கள் திறனைப் பெரிதும் அதிகரிக்கச் செய்கிற விசேஷித்த ஆவிக்குரிய இளைப்பாறுதலின் காலத்திற்காக வெறுமனே காத்திருக்கிறார்கள். தங்களுடைய தற்போதைய கடமைகளையும் சிலாக்கியங்களையும் புறக்கணிக்கிறார்கள்; மேலும், தங்கள் பங்கிற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் விசேஷித்த ஆசீர்வாதம் தங்களுக்கு அருளப்பட்டு, மறுரூபமடைந்து, ஊழியத்திற்குத் தகுதிபடப்போகிற ஒரு காலத்திற்காகக் காத்திருக் கிறார்கள்; அதேசமயம், தங்களுடைய விளக்குகளை மங்கி எரிய விட்டுவிடுகிறார்கள். 2AA, 54 TamChS 334.1