இன்று நம் சபையில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பாவத்திலும் மீறுதல்களிலும் மரித்தவர்களாக இருக்கிறார்கள். கதவு கீழ்முனையில் ஆடுவதுபோல, அவர்கள் வந்து போகிறார்கள். ஆத்துமாவைக் கலங்கச்செய்கிற, மிகவும் பரிசுத்தமான சத்தியங்களை வருடக்கணக்கில் கேட்டு, தன்னிறைவு அடைந்துவிட்டார்கள்; ஆனால் அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவில்லை. அதனால் சத்தியத்தின் அரும்மதிப்பு குறித்த உணர்வு வரவரக் குறைந்துவிட்டது. தேவபக்தியுள்ளவர்களெனச் சொல்லியும் அதன் வல்லமையைப் புறக்கணித்தார்கள். இந்த நிலையிலேயே அவர்கள் தொடர்ந்தால், தேவன் அவர்களைப் புறக்கணிப்பார். அவர்கள் அவருடைய குடும்பத்தின் அங்கத்தினர்களாக மாற, தாங்கள் தகுதியற்றவர்களெனக் காண்பிக்கிறார்கள். 36T, 426,427 TamChS 63.2