நம் பள்ளிகளின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் தேவன் தொடவேண்டியது அவசியமாக இருக்கிறது. தேவன் இது வரை செய்திருப்பதைக் காட்டிலும் அதிகமாக அவர்களுக்குச் செய்யமுடியும். ஏனென்றால், கடந்த காலத்தில் அவருடைய வழி ஓர் எல்லைக்குள் இருந்தது. அவசியப்பட்டால் வழக்கமான பாட நேரத்தில் கொஞ்சநேரம் செலவிட்டாவது அருட்பணிமனநிலையை ஊக்குவித்தால், பரலோக ஆசீர்வாதம் அதிகமாகக் கிடைக்கும். அதிக விசுவாசமும் ஆவிக்குரிய வைராக்கியமும் இருந்தால், தேவனுடைய கிரியைகளை அதிகம் உணர்ந்துகொள்ள முடியும். 3CT, 546 TamChS 92.2