பள்ளி விடுமுறையின் போது, அநேகர் சுவிசேஷப் பிரசங்கிகளாக களத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது. உண்மையுள்ள புத்தக ஊழியர் பல குடும்பங்களைச் சந்தித்து, தற்காலச் சத்தியம் அடங்கிய பிரதிகளை அவர்கள் வாசிக்கும்படி கொடுக்கலாம். நம் புத்தகங்களை விற்பனை செய்ய நம் மாணவர்கள் அறிந்திருக்கவேண்டும். இந்தப்பணியைச் செய்வதற்கு ஆழமான கிறிஸ்தவ அனுபவம் படைத்தவர்களும், சமநிலை சிந்தை கொண்டவர்களும், உறுதியும் கல்வியறிவும் படைத்தவர்களும் தேவை. இப்போது சாதிப்பதை விட அதிகமானதைச் சாதிக்கும் திறன்கொண்ட சுவிசேஷப் பிரசார வாலிபர்களைப் பயிற்றுவிக்க தேவையான தாலந்தும் கல்வியும் அனுபவமும் சிலரிடம் இருக்கிறது. இத்தகைய அனுபவத்தைப் பெற்றவர்கள் பிறகுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய விசேஷக் கடமையைப் பெற்றுள்ளார்கள். 4CT; 546, 547 TamChS 92.3