Go to full page →

நம் பிதாக்களைவிட நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது TamChS 121

நம் பிதாக்களைவிட நம்மேல் அதிகமான வெளிச்சம் வீசப்பட்டுள்ளது. நம் பிதாக்களைப் போலவே நம் கிரியைகளும் ஆராதனைகளும் இருந்தால், தேவனுடைய அங்கீகாரத்தையோ கனத்தையோ பெறமுடியாது. அவர்களில் தேவனுடைய அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றவர்கள் வாழ்ந்ததுபோல நாமும் வாழவேண்டுமானால், அவர்களைப்போலவே உண்மையும் வைராக்கியமும் உள்ளவர்களாக நாமும் இருக்கவேண்டும். அவர்கள்தங்களுக்குக் கிடைத்த வெளிச்சத்தில் வளர்ந்துகொண்டே போனார்கள்; அதுபோல நாமும் வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இன்று அவர்கள் வாழ்ந்திருந்தால் என்ன செய்வார்களோ, அதையே நாமும் செய்யவேண்டும். நம்மேல் பிரகாசிகிற வெளிச்சத்தில் நாம் நடக்கவேண்டும்; நடக்காவிட்டால்,அந்த வெளிச்சம் இருளாக மாறிவிடும். 21T, 262 TamChS 121.1