சிறுவர்களையும் வாலிபர்களையும் ஓய்வுநாள் பள்ளிக்குக் கூடிவரச்செய்தல் அனைவரும் செய்யக்கூடிய மற்றுமோர் ஊழியம் ஆகும். வாலிபர்கள் இத்தகைய ஊழியத்தின் மூலம் அன்பின் இரட்கருக்காக திறமையாகச் செயல்படலாம். ஆத்துமாக்களின் முடிவை அவர்கள் மாற்றியமைக்கலாம். திருச்சபைக்கும் உலகத்திற்கும் அவர்கள் செய்கிற அந்த ஊழியம் எவ்வளவு விஸ்தாரமானது, எவ்வளவு பெரியது என்பதை உண்மையிலேயே பலர் அறியவில்லை; நன்மையும் உண்மையுமான வேலைக்காரனைப் பார்த்து “நல்லது” என்று தேவன் சொல்கிற இறுதி நியாயத்தீர்ப்பின் நாளில் தான் அது விளங்கும். 2 RH, June 10, 1880 TamChS 172.2