ஊழியம் செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிற நபர்கள் அநேக விஷயங்களைச் செய்யமுடியும். திருச்சபையில் பிரசங்கிக்கிற சத்தியத்தைக் கேட்பதற்கு அங்கு அநேகர் செல்ல மாட்டார்கள். எளிய விதத்தில், ஞானத்தோடு முயற்சிசெய்து இவர்களை தேவனுடைய வீட்டிற்குச் செல்லும்படி தூண்டவேண்டும். தற்காலச் சத்தியம் குறித்த பிரசங்கத்தை முதல் முறை கேட்கும் போது அவர்களுடைய உள்ளங்களில் வலுவான உணர்த்துதல் உண்டாகும். நீங்கள் வேண்டிக் கொள்ளும்போது அவர்கள் மறுத்தால்,அதைரியமடையாதீர்கள். வெற்றி கிடைக்குமட்டும் விடாமல் முயற்சிசெய்வது உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி மகுடமாக விளங்கும். 1RH, June 10, 1880 TamChS 172.1