Go to full page →

தன வரம் LST 181

தேவனுக்குச் செலுத்தும் தசமபாகங்களும் காணிக்கைகளும் சிருஷ்டிப்பின் மூலமாய் அவருக்கு நம் மேலுள்ள உரிமையை அங்கிகாரம் செய்கிறவைகளாய் மாத்திரமில்லாமல் மீட்பின் மூலமாயும் அவருடைய உரிமையை அவைகள் அங்கிகாரம் செய்கிறவை களாயுமிருக்கிற படியால் இக் காணிக்கைகளை நம்மிலிருந்து தேவனிடம் வழிந்தோட வேண்டும். சகல உரிமைகளிலும் பெரிதும் மற்றெந்த உரிமையும் தனக்குட் படுத்துகிறதுமான அந்த மீட்பின் உரிமையை அவைகள் எப்பொழுதும் நமக்கு முன் நிறுத்தி வைக்க வேண்டும். நமது நிமித்தம் செலுத்தப்பட்ட பலியைப் பற்றிய சிந்தனை எப்பொழுதும்நம் மனசில் மங்காமல் இருப்பதும் தவிர நமது நினைவுகளையும் நோக்கங்களையும் எப்பொழுதும் தூண்டுகிறதுமாய் இருக்க வேண்டும். உண்மையில் கிறிஸ்து நமக்குள் சிலுவையில் அறையுண்ட ஒருவராக இருக்க வேண்டும். ----- 6 T 479. LST 181.1