Go to full page →

உபத்திரவம் தேவனுடைய மக்களை ஒன்றுபட வழிநடத்தும் கச 111

உபத்திரவத்தின் புயல் உண்மையாகவே நம்மீது தாக்கும்போது, உண்மையான ஆடுகள் உண்மையான மேய்ப்பனின் குரலைக் கேட்கும். தொலைந்துபோனவர்களை இரட்சிக்கும்படியாக சுயத்தை மறுக்கும் முயற்சிகள் எடுக்கப்படும். தொழுவத்திலிருந்து வழிதவறிச் சென்ற அநேகர், பெரிய மேய்ப்பனைத் தொடர்ந்து வரும்படியாக மீண்டும் திரும்பி வருவர். தேவனுடைய மக்கள் ஒன்றாக நெருங்கிச் சேர்ந்து சத்துருவுக்கு ஒரு ஒருங்கிணைந்த எதிர்ப்பை வெளிப்படையாகக்காண்பிப்பார்கள். மிக உயர்ந்த அதிகாரத்தைப் பெறுவதிலே இருந்த ஆபத்தான போராட்டத்தின் பொதுவான கண்ணோட்டம் முடிவுக்கு வரும். அப்போது, யார் பெரியவராகக் கருதப்படுவர் என்பதற்கான விவாதமே அங்கு இல்லாமற்போகும். — 6T401 (1900). கச 111.5