Go to full page →

உப்பதிரவம் தேவனுடைய மக்களை சுத்திகரிக்கும் கச 112

வெகுசீக்கிரத்தில் உலகம் முழுவதிலும் இக்கட்டு வரவிருக்கின்றது. ஒவ்வொருவரும் தேவனைத் தேடி அறிந்துகொள்வதற்கு அது சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. தாமதிப்பதற்கு நமக்கு நேரம் கிடையாது... கச 112.3

தேவன் தமது சபையின்மேல் வைத்திருக்கும் அன்பு அளவிட முடியாததாகும். அவரது சொந்த சம்பத்தினமேல் அவருக்குள்ள அக்கறை முடிவில்லாததாக இருக்கின்றது. சபையினுடைய நிகழ்காலம் மற்றும் நித்தியத்திற்கான நன்மைக்கும், தூய்மைக்கும் அவசியமான அப்படிப்பட்ட உபத்திரவத்தைக் தவிர, வேறு எந்த உபத்திரவமும் அவரது சபையின்மீது வரும்படியாக தேவன் அனுமதிப்பதில்லை. பூமியிலே தமது ஊழியத்தின் துவக்கத்திலும் முடிவிலும் அவர் ஆலயத்தை சுத்தம் செய்தது போன்று, தமது சபையை சுத்தம் செய்வார். சபையின்மீது தேவன் அனுமதிக்கின்ற சோதனைகள் மற்றும் போராட்டங்கள் அனைத்தும், சிலுவையின் வெற்றிகளை உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லவதற்குரிய ஆழமான பக்தியையும், அதிகமான வல்லமையையும் அவரது மக்கள் பெற்றுக்கொள்வதற்காகவே அனுமதிப்படுகின்றன. — 9T228 (1909). கச 112.4

உபத்திரவங்கள், சிலுவைகள், சோதனைகள் துன்பங்கள் மற்றும் நமது பல்வேறுபட்ட வருத்தங்கள் அனைத்தும் நம்மைச் சுத்திகரிப்பதற்காகவும், நம்மைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவும், பரலோகக்களஞ்சியத்திற்கு நம்மைத் தகுதிப்படுத்துவதற்காகவும் தேவன் பயன்படுத்தக்கூடிய அவரது பணியாட்களாகும். — 3T115 (1872). கச 112.5