Go to full page →

பாகுபாடின்றி விநியோகியுங்கள் TamChS 202

ஊழியர்கள் சென்று பேசமுடியாத இடங்கள் அநேகமுண்டு; வெளியீடுகள்மட்டுமே அத்தகைய இடங்களைச் சென்றடைய முடியும். வேதாகமச் சத்தியம் நிறைந்த புத்தகங்களும் பிரசுரங்களும் துண்டுப்பிரதிகளும் அங்குள்ள மக்களுக்கு தேவைப்படும். நம்முடைய புத்தகங்களை எல்லா இடங்ளிலும் விநியோகிக்க வேண்டும். தண்ணீர் களண்டையில் சத்தியத்தை விதைக்க வேண்டும்; ஏனென்றால், இதுவோ அதுவோ எது வாய்க்குமோ என்று நமக்குத் தெரியாது. சத்தியத்தை உடனே ஏற்றுக்கொள்வோருக்கு புத்தகங்களைக் கொடுப்பது ஞானமானதல்ல என்று நாம் தவறாகத் தீர்மானிக்கலாம். தற்காலச் சத்தியம் அடங்கிய துண்டுப்பிரதியைக் கொடுப்பதால் என்னென்ன நன்மையான விளைவுகள் உண்டாகக் கூடும் என்பதை நாம் அறியாமல் இருக்கலாம். 2 SW, Ja. 5, 1904 TamChS 202.1