Go to full page →

மீதியான துணிக்கையும் பொக்கிஷமே TamChS 202

ஒருசில அப்பங்களையும் மீன்களையும் கொண்டு ஏராளமானோரைப் போஷித்த அற்புதத்தில், அதை கிறிஸ்து எடுத்து மற்றவர்களுக்குக் கொடுத்தபோது அது அதிகரித்தது. அதுபோலத்தான் நம் புத்தகங்களை நாம் விநியோகிப்பதும். தேவ சத்தியத்தைக் கொடுக்கும் போது, அது அதிகமாகப் பெருகும். மீதியான துணிக்கைகளில் ஒன்றையும் விடாமல் சேர்க்கும்படி கிறிஸ்து சொன்னார்; அப்படியே சீடர்கள் செய்தார்கள். அப்படியே இக்காலத்திற்கான சத்தியம் அடங்கிய பிரசுரங்களை நாம் சேர்க்கவேண்டும். மூன்றாம் தூதனுடைய தூதின் சத்தியங்கள் அடங்கிய ஒரு கிழிந்த பக்கம் கூட சத்தியத்தைத் தேடுகிற சிலருடைய இருதயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது. 3SW, Jan. 5, 1904 TamChS 202.2