Go to full page →

தொடர்ந்து உதவி செய்வதன் முக்கியத்துவம் TamChS 287

மாபெரும் கூட்டங்களில் சத்தியத்தை அறிவித்ததும், அது குறித்த கேள்விகள் மனதில் எழுகின்றன. அவ்வாறு ஆர்வங் கொண்டோரை தனிப்பட்ட விதத்தில் கண்காணிப்பது மிகவும் முக்கியம். சத்தியம்பற்றி ஆராய்ந்தறிய விரும்புகிறவர்களை வேத வசனத்தை கருத்தோடு ஆராய்வதற்குப் பயிற்றுவிக்க வேண்டும். உறுதியான அஸ்திபாரத்தின்மேல் கட்டுவதற்கு யாராவது ஒருவர் உதவிசெய்தாகவேண்டும். TamChS 287.2

அவர்களுடைய ஆவிக்குரிய அனுபவத்தின் இந்த முக்கியக் காலக்கட்டத்தில் ஞானமாக வழி நடத்தப்பட்ட வேதாகம ஊழியர்கள் அவர்களுக்கு உதவியாகச் சென்று, வேதவசனமாகிய பொக்கிஷச் சாலையை திறந்துகாட்டுவது எவ்வளவுக்கு முக்கியம்! 39T, 111 TamChS 287.3

பொன்னான தருணத்தை இழந்திருக்கிறோம். தாக்கங்கள் ஏற்பட்டும், அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கவில்லை. இதற்கு அவர்களில் ஆர்வமே ஏற்படாமல் இருந்திருக்கலாம்; ஏனென்றால், மனதில் உணர்த்துதல் உண்டாகும்போது, அவற்றை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டால், மீண்டும் சிந்தையில் சத்தியத்தின் தாக்கத்தை உண்டாக்குவது மிகவும் கடினம். 49T, 118 TamChS 287.4