Go to full page →

முக்கியக் கேள்விகள் TamChS 110

நித்திய வாழ்க்கையை வெகுகாலமாக எதிர்பார்த்து வருகிறோம். திரை விலக்கப்படவுள்ளது. நம்மைச் சுற்றிலுமுள்ள ஆத்துமாக்கள் அழிந்துகொண்டிருக்கும்போது, எதுவுமே செய்யாமல் சுயநலமாகவே வாழ்ந்தால், எத்தகைய எண்ணமுள்ளவர்களாக இருப்போம்? TamChS 110.1

நம் இருதயங்கள் முற்றிலும் கல்லாகி விட்டனவா? TamChS 110.2

மற்றவர்களுக்காக நாம் செய்யவேண்டிய ஒரு பணி இருப்பதை புரியவும், காணவும் இயலவில்லையா? TamChS 110.3

என் சகோதர சகோதரிகளே, கண்ணிருந்தும் காணாமல், காதிருந்தும் கேளாமல் இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்களா? TamChS 110.4

தேவன் தம் சித்தத்தைக் குறித்த அறிவை உங்களுக்குக் கொடுத்திருப்பது வீண்தானா? TamChS 110.5

உலகத்தில் சம்பவிக்க இருப்பவைகுறித்து அவர் தம் வார்த்தையில் அறிவித்திருப்பவைகளை நம்புகிறீர்களா? TamChS 110.6

பூமியின் குடிமக்கள்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரப்போவதை நம்புகிறீர்களா? TamChS 110.7

அப்படியானால், எதுவும் செய்யாமல், கவனக்குறைவோடும், அலட்சியமாகவும் எவ்வாறு உங்களால் இருக்கமுடிகிறது? 29T, 26,27 TamChS 110.8