Go to full page →

என்ன நடந்திருக்கலாம் TamChS 118

கிறிஸ்துவின் ஒவ்வொரு வீரனும் தன் கடமையைச் செய்திருந்தால், சீயோனின் மதில்கள்மேல் உள்ள ஒவ்வொரு காவலாளனும் எக்காளத்தை வலுவாக ஊதியிருந்தால், இந்த உலகத்திற்கு முன்னரே எச்சரிப்பின் செய்தி அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் பல வருடங்கள் தாமதமாகத்தான் பணி நடந்துவருகிறது. மனிதர்கள் தூங்குகிற சமயத்தில், சாத்தான் நம்மத்தியில் இரகசியமாக வலம் வந்துவிடுகிறான். 29T, 29 TamChS 118.1

நமக்கு நியமிக்கப்பட்ட பணியில் நாம் இப்போது ஈடுபட்டு, ஆண்களையும் பெண்களையும் அவர்களுடைய ஆபத்துபற்றி விழிக்கச் செய்கிற செய்தியை அறிவிப்போம். ஒவ்வோர் செவந்த்டே அட்வென்டிஸ்டும் தன்மேல் சுமத்தப்பட்ட பணியைச் செய்திருந்தால், இப்போது இருப்பதைவிட அதிகமான அங்கத்தினர்கள் இருந்திருப்பார்கள். தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்கிற செய்தியைக் கேட்கும்படி அமெரிக்காவின் அனைத்து நகரங்களிலும் உள்ளவர்கள் வழி நடத்தப்பட்டிருப்பார்கள். 39T, 25 TamChS 118.2

இரக்கத்தின் செய்தியை உலகிற்கு அறிவிப்பதுகுறித்த தேவ நோக்கம் நிறைவேற்றப்பட்டிருந்தால், இதற்குமுன்னரே கிறிஸ்து உலகத்திற்கு வந்திருப்பார்; பரிசுத்தவான்கள் தேவனுடைய நகரத்திற்குச் சென்றிருப்பார்கள். 46T, 450 TamChS 118.3