Go to full page →

கனமான கிரீடத்திற்குக் குறிவையுங்கள் TamChS 146

களைப்போ மனச்சோர்வோ நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. சௌக்கியம், வசதி, இன்பம்,லௌகீகசிற்றின்பங்கள் போன்றவற் றிற்காக நிலைத்திருக்கிற மகிமையை விலைபேதினால் மிகப்பெரிய இழப்பை அடைவோம். வெற்றி பெறுகிறவருக்கான பரிசு தேவனுடைய கரத்தில் காத்திருக்கிறது. அதைப் பெற நாம்யாருமே தகுதியில்லாதவர்கள்; இது அவர் தயவாகத் தருவது. அந்தப் பரிசுத்த மகிமை அருமையானது. ‘மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது’ என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். தேர்ச்சிப்பெற்றவர்களாக விளங்க நாம் பிரயாசப்படும்போது, நட்சத்திரங்கள் அதிகம் இருக்கிற கனமான கிரீடத்தை இயேசுவின் பெலத்தால் பெறுவதற்கு நாம் குறிவைக்க வேண்டும்.“ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்கு உட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” 2RH, Oct. 25, 1881 TamChS 146.1