Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நாட்டு நிலைமைகள் கவனிக்கப்பட வேண்டும்

    அமிதமாயிருத்தலுக்கும், பெருந் தீனிக்கும், நாம் எதிர்த்தும் போராடும் போது, மானிட குடும்பம் எந்நிலைமைக்குட்பட்டிருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகில் பல நாடுகளில் வசிப்பவர்களுக்கும், தேவன் ஆகாரத்துக்கு வேண்டியவைகளை உண்டாக்கி வைத்திருக்கிறார். தேவனுக்கு உடன் ஊழியராயிருக்க விரும்புகிறவர்கள், இன்ன உணவை உண்ண வேண்டும், எப்படிப்பட்ட ஆகாரத்தைப் புசிக்கக் கூடாது என்று அவர்கள் திட்டம் வகுக்கு முன் நுட்பமாக ஆலோசிக்க வேண்டும். பாமர ஜனங்களோடு நம்மை சம்பந்தப்படுத்திப் பார்க்க வேண்டும். ஆரோக்கிய சீர்திருத்தம் கைக்கொள்ளப்படும் நிலைமைகளிலிராதவர்களுக்கு அது உச்ச நிலையில் அவர்களுக்குப் போதிக்கப்பட்டால், நன்மையையல்ல, அதிகத் தீமையை விளைவிக்கும். தரித்திருந்த நான் சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கும் போது, மிக சத்துள்ள ஆகாரத்தை உண்ண வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லும்படி நான் கற்பிக்கப்பட்டேன். நான் அவர்களை நோக்கி: நீங்கள் பால், பாலாடை அல்லது முட்டைகளைச் சாப்பிடக் கூடாது, ஆகாரத்தை ஆயத்தம் செய்வதில் நீங்கள் வெண்ணெய் உபயோகிக்க வேண்டாக் என்று நான் சொல்ல முடியாது. தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும். ஆனால் கண்டிப்பான ஆகாரத்தை குறிப்பிடத்தக்க காலம் இன்னும் வரவில்லை.CCh 609.2