Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    தப்புப் போதனைகளை பரப்புகிறவர்களுக்கு ஆலோசனை

    தங்கள் சொந்தப் பொறுப்பில் தூது அறிவிக்க தலைப்பட்டு, தேவன் தங்களுக்கு கற்பித்து, தங்களை வழி நடத்துகிறாரென்று கூறிக்கொண்டு, தேவன் பல ஆண்டுகளாகக்கட்டி வந்த வேலையைத் தகர்த்தெறிவதைத் தங்கள் விசேஷித்த வேலையாக்கிக்கொள்பவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறதில்லை. இவர்கள் மகா பெரும் வஞ்சகனைச் சேர்ந்தவர்கள் என்று அறிவோமாக. அவர்களை நம்பாதிருங்கள்.CCh 201.1

    பொருளுக்கும் திறமைக்கும் உக்கிராணக்காரராக நியமனம் பெற்றவர்கள் போலவே தப்புப் போதனைகளை விதைப்பதினால் கர்ததருடைய ஆஸ்தியை நீங்கள் துர்ப்பிரயோகம் செய்கின்றீர்கள். கட்டுப்டுத்தும் தேவ பிரமாணத்தைப் பற்றிக் கூறியறிவிப்போரை உலகமே பகைக்கின்றது; ஏகோவாவின் மெய்யான சபைக்கு பெரும் போராட்டம் உண்டு. “ஏனெனில், மாம்சத்தோடும், இரத்தத்தோடு மல்ல, துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” எபே. 6:12. தமக்கு முன்னிருக்கும் போராட்டத்தைச் சரிவர உணர்ந்த எவரும் போராடும் சபைக்கு விரோதமாகப்பட்டயம் எடுக்காமல், தேவனுடைய மக்களோடு சேர்ந்து பொல்லாங்கனின் கூட்டத்திற்கு விரோதமாக தங்கள் முழு பலத்தோடு போரிடுவார்கள். 2 T.T. 356,357CCh 201.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents