Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    9 - உள்ளபடியே ஒரு வாரம்

    ஓய்வுநாளைப்போலவே வாரமும் சிருஷ்டிப்பில் துவங்கி, வேத சரித்திரத்தினால் பாதுகாக்கப்பட்டு, நம்மிடம் கொண்டுவரப் பட்டிருக்கிறது. காலத்தின் முடிவுவரையிலும் அடுத்து வரும் வாரங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கும்படி தேவன்தாமே முதல் வாரத்தை அளந்தார். மற்ற எல்லா வாரத்தையும் போலவே அதுவும் எழுத்தின்படியான ஏழு நாட்களைக் கொண்டிருந்த்து. ஆறு நாட்கள் சிருஷ்டிப்பின் வேலைக்கு உபயோகிக்கப்பட்டது. ஏழாம் நாளில் தேவன் ஓய்ந்திருந்து, அந்த நாளை ஆசீர்வதித்து, மனிதனுக் கான ஓய்வுநாளாக அதைப் பிரித்துவைத்தார்.PPTam 113.1

    சீனாயிலிருந்து கொடுக்கப்பட்ட பிரமாணத்தில் தேவன் வாரத் தையும் நினைவு கூர்ந்தார். அது என்ன உண்மைகளின் மேல் அஸ்திபாரமிடப்பட்டதோ, அதையும் நினைவுகூர்ந்தார். ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக என்ற கட்டளை யைக் கொடுத்த பின்பு, ஆறு நாளிலும் என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும் ஏழாம் நாளிலே என்ன செய்யப்படக்கூடாது என் பதையும் குறிப்பிட்ட பின்பு, வாரத்தை அவ்வாறு கைக்கொள்வதற்கான காரணத்திற்கு கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் என்று தம் முடைய சொந்த உதாரணத்தைச் சுட்டிக்காட்டினார் (யாத் 20:3-11). சிருஷ்டிப்பின் வாரம் எழுதின்படியானது என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது, இந்த காரணம் அழகானதும் கட்டாயப்படுத் துவதுமாகத் தோன்றுகிறது. தேவன் முதல் வாரத்தின் முதல் ஆறு நாட்களை சிருஷ்டிப்பின் வேலையில் ஈடுபடுத்தினபடியால், ஒவ்வொரு வாரத்தின் முதல் ஆறு நாட்களும் மனிதனுக்கு உழைப் பிற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏழாம் நாளில் சிருஷ்டிகரின் ஓய்வை நினைவுகூரும் வகையில் மனிதன் உழைப்பிலிருந்து விலக வேண்டும்.PPTam 113.2

    ஆனால் முதல் வாரத்தின் சம்பவங்கள் நடந்தேற ஆயிரக்கணக் கான வருடங்கள் தேவைப்பட்டது என்கிற யூகம், நான்காம் கற்பனையின் அஸ்திபாரத்தை நேரடியாக தாக்குகிறது. பரந்த அளவிடமுடியாத காலங்களை நினைவுகூரும்படி எழுத்தின் படியான நாட்களைக் கொண்ட வாரத்தைக் கைக்கொள்ள சிருஷ்டி கர்கட்டளை கொடுக்கிறார் என்று இது எடுத்துக்காட்டுகிறது. அவர் தமது சிருஷ்டிகளோடு இவ்விதம் இடைப்படுவதில்லை. அவர் மிகத் தெளிவாகச் செய்திருக்கிறதை இது அளவிடக்கூடாததும் மறை வானதுமாக்குகிறது. இது மிக அதிக தந்திரமாக கடவுளை அவிசு வாசிப்பதாகும். எனவே மிக ஆபத்தான வடிவமாகும். அதனுடைய மெய்யான குணம் அதிக வேஷம் தரித்திருக்கிறதினிமித்தம் வேதாகமத்தை நம்புவதாகக் கூறிக்கொள்ளும் அநேகரால் பேணப் பட்டு போதிக்கவும் படுகிறது.PPTam 114.1

    கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் சங் 33 69. இந்த குழப்பத்திலிருந்து மெதுவாகப் பரிணமித்து வந்த நீண்ட யுகங்களை வேதாகமம் ஒத்துக்கொள்ளுவதில்லை. சிருஷ்டிப்பின் நாட்களைக்குறித்து : அவைகள் அவைகளைப் பின்தொடர்ந்து வந்த மற்ற அனைத்து நாட்களையும் போலவே சாயங்காலத்தையும் விடியற்காலத்தையும் கொண்டிருந்தது என்று பரிசுத்த ஆவணம் அறிவிக்கிறது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் சிருஷ்டிகருடைய வேலையின் பலன் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே (ஆதி.2:4) என்று முதல் வார சம்பவங்களுடைய பதிவின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் சிருஷ்டிப்பின் நாட்கள் எழுத்தின்படியான தல்லவென்ற கருத்தைக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் வரலாறு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதிலே தேவன் தமது வேலையில் சில புதிய பகுதியை உண்டாக்கினார் அல்லது விளைவித்தார்.PPTam 114.2

    மோசேயின் பதிவுகள் போதிக்கிறதைக்காட்டிலும் இந்த பூமி மிகப் பழைமையானது என்பதற்கான சான்றுகளை பூமியிலிருந்தே கண்டுபிடிப்பதாக நிலவியல் நிபுணர்கள் உரிமை கோருகிறார்கள். இப்போது இருக்கிறவைகளைக்காட்டிலும் அல்லது ஆயிரக்கணக் கான வருடங்களாக இருந்தவைகளைக்காட்டிலும் அளவில் மிகவும் பெரியதான மனிதர்கள் மற்றும் மிருகங்களின் எலும்புகளும், யுத்த ஆயுதங்களும், கல்லாகிப்போன மரங்களும் இன்னும் அநேக பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளி லிருந்து, சிருஷ்டிப்பின் பதிவுகளிலிருந்து பார்வைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிற காலத்திற்கு அதிக முன்பாகவே இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற எந்த மனிதனைவிடவும் மிகவும் பெரிய உருவங்கொண்ட ஒரு இனத்தால் பூமி ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது என்று யூகிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட காரணங்கள், சிருஷ் டிப்பின் நாட்கள் மிகப்பரந்த அளவிட முடியாத காலங்களைக் கொண்டது என்கிற நிலையை ஏற்றுக்கொள்ள வேதாகமத்தை விசுவாசிப்பதாகக் கூறிக்கொள்ளும் அநேகரை நடத்தியிருக்கிறது.PPTam 115.1

    ஆனால் வேதாகம சரித்திரத்திற்கு அப்பால் நிலவியல் ஒன் றையும் நிரூபிக்க முடியாது. அதன் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மிக நம்பிக்கையோடு காரணம் சொல்லுகிறவர்கள் ஜலப்பிரள யத்திற்கு முந்தின மனிதர், மிருகங்கள், மரங்களைக்குறித்த அல்லது அதற்குப்பின் ஏற்பட்ட மகாபெரிய மாற்றங்களைக் குறித்த போதுமான அறிவு இல்லாதிருக்கிறார்கள் பூமியிலிருந்து கண்டு பிடிக்கப்பட்ட மீதியான பொருட்கள் இப்போதிருக்கிறதை விட அநேக விதங்களில் வேறுபட்டிருந்த நிலைமைகளுக்கான சான்றுகளைக் கொடுக்கின்றன. ஆனால் இந்த நிலைகள் இருந்த காலத்தை, தேவ ஆவியால் ஏவப்பட்ட பதிவுகளிலிருந்து மாத்திரமே அறிந்து கொள்ளமுடியும். வெள்ள சரித்திரத்தில் நிலவியல் தனித்து நின்று விளக்க முடியாததை தேவ ஆவியின் ஏவுதல் விளக்குகிறது. நோவாவின் நாட்களில், இப்போது இருப்பதைக்காட்டிலும் அநேக மடங்கு பெரியவைகளாயிருந்த மனிதரும் மிருகங்களும் மரங்களும் புதைக்கப்பட, இவ்வாறு ஜலப்பிரளயத்துக்கு முந்தைய மக்கள் வெள்ளத்தினால் அழிந்தார்கள் என்பது பின் சந்ததிகளுக்கு சான்றாயிருக்கும்படி பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இவைகளின் கண்டுபிடிப்புகள் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட சரித் திரத்தின் மேல் விசுவாசத்தை உண்டு பண்ணவேண்டும் என்று தேவன் வடிவமைத்தார். ஆனால் மனிதர்கள் தங்களுடைய வீணான காரணங்களைக் கற்பிப்பதினால், ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்த மக்கள் விழுந்த அதேதவறில் விழுகிறார்கள். நன்மை யாயிருக்கும்படி தேவன் அவர்களுக்குக் கொடுத்த காரியங்களை தவறாக உபயோகிப்பதினால் சாபமாக மாற்றுகிறார்கள்.PPTam 115.2

    நம்பிக்கையின்மையின் கற்பனைகளை ஏற்றுக்கொள்ளும்படி மக்களை நடத்தும் சாத்தானுடைய கருவிகளில் இதுவும் ஒன்று. இவ்வாறாக அவன் தன்னில் தானே தெளிவாக இருக்கிற தேவ னுடைய பிரமாணங்களை மறைத்துப்போட்டு, தெய்வீக அரசாங்கத்துக்கு எதிராகக்கலகம் செய்ய மனிதரை தைரியப்படுத்துகிறான். அவனுடைய முயற்சிகள், விசேஷமாக நான்காம் கற்பனைக்கு எதி ராக இருக்கின்றன. ஏனெனில் அது மிகத் தெளிவாக, ஜீவனுள்ள தேவனை வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரைச் சுட்டிக்காட்டுகிறது.PPTam 116.1

    சிருஷ்டிப்பின் வேலை இயற்கையான காரணங்களின் விளைவு என்று விளக்கங்கொடுக்க நிலையான முயற்சி இருந்து கொண்டிருக்கிறது. வேத வசனங்களின் எளிமையான உண்மை களுக்கு எதிராக, கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்களாலும் மனித காரணங்கள் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. தீர்க்கதரிசனங்களை, விசேஷமாக தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷத்தை, அவை மறைவானவை; நம்மால் அவைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்று அறிவித்து, அவைகளை ஆராய்வதை எதிர்க்கிற அநேகர் இருக்கிறார்கள். ஆனால் மோசேயின் பதிவுகளுக்கு முரண்பாடான நில ஆராய்ச்சியாளர் களின் யூகங்களை இதே நபர்கள் விருப்பத்தோடு பெற்றுக் கொள்ளுகிறார்கள். தேவன் வெளிப்படுத்தியிருக்கிறவைகள் புரிந்து கொள்ளுவதற்கு மிகச் கடினமாயிருக்குமென்றால், அவர் வெளிப்படுத்தாத மனித யூகங்களை ஏற்றுக்கொள்வது எவ்வளவு ஒவ்வாததாயிருக்கும்!PPTam 116.2

    மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ,..... நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். உபா 29:29. தேவன் தமது சிருஷ்டிப்பின் வேலையை எவ்வாறு நடத்தினார் என்கிறதை மனிதனுக்கு ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. மனித அறிவியல், உன்னதமானவரின் இரகசியங்களை ஆராயமுடியாது; அவரது ஜீவனைப்போலவே அவரது சிருஷ் டிக்கும் வல்லமையும் புரிந்துகொள்ளக்கூடாத ஒன்று.PPTam 116.3

    அறிவியலிலும் கலையிலும் ஒரு ஒளிவெள்ளம் பூமியின் மேல் விழும்படி தேவன் அனுமதித்திருக்கிறார். ஆனால் அறிவியல் மனிதர்கள் மனித கண்ணோட்டத்தில் மாத்திரம் அவைகளைக் காண்பார்களானால், நிச்சயமாகவே தவறான முடிவுகளுக்கு வருவார்கள். நமது தேற்றங்கள் வேதவாக்கியங்களில் காணப் பட்டிருப்பதற்கு முரணாக இல்லாத பட்சத்தில் தேவனுடைய வார்த் தைகள் வெளிப்படுத்தியிருக்கிறவைகளைத் தாண்டி கற்பனை செய்வது வெகுளித்தனமாக இருக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தையை விட்டுவிலகி, அவருடைய சிருஷ்டிப்பின் வேலைக்கு அறிவியல் கொள்கைகளை காரணங்காட்ட தேடுகிறவர்கள், அறியாத சமுத்திரத்தில் வரைபடமோ திசைகாட்டும் கருவியோ இல்லாது அலைகிறவர்களைப்போல இருக்கிறார்கள். மாபெரும் மனங்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் வேதவார்த்தைகளால் நடத்தப்படாதபோது, அறிவியலுக்கும் வெளிப்படுத்தலுக்குமுள்ள உறவைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சியில் குழம்புவார்கள். சிருஷ்டிகரும் அவரது கிரியைகளும் அவர்களுடைய புரிந்துகொள்ளுதலுக்கு வெகு அப்பால் இருக்கிறபடியால், இவைகளுக்கு இயற்கையின் நியதிகளால் விளக்கங்கொடுக்க முடிவதில்லை. எனவே வேதாகம சரித்திரம் நம்பக்கூடாது என்று கருதுகிறார்கள். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டுப்பதிவுகளின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கிறவர்கள் இன்னும் ஒருபடி முன்னே சென்று தேவன் இருக்கிறதையே சந்தேகிக்க நடத்தப்படுவார்கள். பின்னர் தங்கள் நங்கூரத்தை இழந்தவர்களாக நம்பிக்கையின்மையின் பாறைகள் மேல் மோதியடிக்கப்படும்படி விட்டுவிடப் படுவார்கள்.PPTam 117.1

    இந்த நபர்கள் எளிமையான விசுவாசத்தை இழந்துவிட்டார்கள். தேவனுடைய பரிசுத்த எழுத்துக்களின் தெய்வீக அதிகாரத் தின்மேல் உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அறிவியலைக் குறித்த மனித கருத்துக்களினால் வேதாகமம் சோதிக்கப்படக் கூடாது. மனித அறிவு நம்பக்கூடாத வழிகாட்டி. மறுப்பதற்காகவே வேதாகமத்தைப் படிக்கும் சந்தேகவாதிகள் அறிவியலையாவது வெளிப்படுத்துதலையாவது பூரணமாக புரிந்துகொள்ளாததால், அவைகளுக்கிடையே முரண்பாடு கண்டுபிடிப்பதாக உரிமை பாராட்டலாம். ஆனால் சரியாகப் புரிந்து கொள்ளப்படும் போது, இவைகள் பூரண இணக்கத்துடனேயே இருக்கின்றன.PPTam 117.2

    தேவ ஆவியானவரின் நடத்துதலின் கீழ்மோசே எழுதினான். நிலவியலின் சரியான தேற்றங்கள் அவனுடைய வாக்கியங்களோடு ஒத்துப் போகமுடியாத கண்டுபிடிப்புகளை ஒருபோதும் உரிமை பாராட் டாது. இயற்கையிலாகட்டும், வெளிப்பாட்டிலாகட்டும் அனைத்து சத்தியங்களும் அதன் அனைத்து வெளிப்பாடுகளுடனும் வேத வாக்கியங்களோடு ஒத்துப்போகும்.PPTam 118.1

    மிகப்பிரபலமான கல்வியாளர்களும் ஒருபோதும் பதிலளிக் கக்கூடாத அநேக கேள்விகள் தேவனுடைய வார்த்தையில் எழுப் பப்பட்டிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையின் பொதுவான காரி யங்களிலே கூட, முடிவுள்ள மனங்கள் தாங்கள் பெருமை பாராட் டுகிற அனைத்து ஞானத்தோடும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத எத்தனையோ இருக்கின்றன என்பதை நமக்குக் காண் பிக்கும் படி நம்முடைய கவனம் இந்தக் காரியங்களுக்கு அழைக் கப்படுகின்றது.PPTam 118.2

    என்றாலும் தேவனுடைய ஞானத்தை அவர் செய்திருக்கிறவைகளை அல்லது அவரால் செய்யக்கூடியவைகளை புரிந்து கொள்ள லாம் என்று அறிவியல் மனிதர்கள் நினைக்கிறார்கள். அவர் தமது சொந்த கட்டளைகளால் தடுக்கப்பட்டிருக்கிறார் என்கிற கருத்து அதிகமாக நிலவுகிறது. மனிதன் தேவனை மறுதலிக்கிறான் அல்லது ஒதுக்குகிறான் அல்லது அனைத்தையும் மனித மனதின்மீது அவருடைய ஆவியானவரின் செயல்பாட்டையும் விளக்க நினைக் கிறான். இவ்வாறு அவர்கள் அவருடைய நாமத்துக்கு ஒருபோதும் பயபக்தியை காண்பிப்பதில்லை அல்லது அவருடைய வல்ல மைக்கு பயப்படுகிறதில்லை. தெய்வீகத்தை அவர்கள் நம்புகிற தில்லை; தமது சித்தத்தை அவர்கள் வழியாக செயல்படுத்தும் தேவ னுடைய பிரமாணங்களையோ அல்லது அவருடைய முடிவில்லாத வல்லமையையோ புரிந்து கொள்ளுவதில்லை. இயற்கையின் சட்டங்கள் என்று பொதுவாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தை, பூகோளத்தை ஆட்சி செய்யும் சட்டங்களைக் குறித்து மனிதன் எவைகளைக் கண்டுபிடிக்க முடிந்ததோ, அவைகளையே உள்ளடக் கியுள்ளது. ஆனால் அவர்களுடைய அறிவு எவ்வளவு குறுகியது! முடிவடையக்கூடிய மனிதனுடைய புரிந்து கொள்ளுதலுக்கு முழு வதும் அப்பால், தமது சொந்த சட்டங்களுக்கு இசைவாக சிருஷ்டிகர் கிரியை செய்யக்கூடிய தளம் எவ்வளவு பரந்தது!PPTam 118.3

    வஸ்துக்கள் உயிர்வல்லமையைப் பெற்றிருக்கின்றன. அதாவது வஸ்துக்களுக்கு சில குணங்கள் கொடுக்கப்பட்டு, அவைகள் இயற்கையாக அமையப்பெற்ற பலத்தினால் இயங்கும்படி பின்னர் விட்டுவிடப்படுகின்றன, மேலும் இயற்கையின் செல்பாடுகள் நிலையான சட்டங்களுக்கு இணக்கமாகவே நடத்தப்படுகின்றன, அவைகளிடையே கடவுளால் கூட இடை படமுடியாது என்று அநேகர் போதிக்கிறார்கள். இது பொய்யான அறிவியல். இது வேதவார்த்தைகளால் தாங்கப்படுவதில்லை. இயற்கை அதை உண்டாக்கினவருடைய வேலையாள். தேவன் தமது சட்டங்களை அகற்றுவதோ அல்லது அவைகளுக்கு முர ணாக செயல்படுவதோ இல்லை. மாறாக, அவைகளைத் தமது கரு விகளாக தொடர்ந்து உபயோகிக்கிறார். தமது சட்டங்களுக்குள்ளும் சட்டங்கள் வழியாகவும் செயல்படுகிறஞானமுள்ள, அங்கிருக்கிற, மற்றும் செயல்படுகின்ற ஒரு வல்லமைக்கு இயற்கை சாட்சி பக ருகிறது. இயற்கையில் பிதாவும் குமாரனும் தொடர்ந்து செயல் படுகிறார்கள். இயேசு அவர்களை நோக்கி என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்துவருகிறார், நானும் கிரியை செய்துவருகிறேன் (யோவான் 5:17) என்று கிறிஸ்து சொல்லுகிறார்.PPTam 118.4

    லேவியர்கள், நெகேமியா பதிவு செய்த பாடல்களில் நீர் ஒருவரே கர்த்தர், நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர் (நெகே 9:6) என்று பாடினார்கள். இந்த உலகத்தைப் பொறுத்தவரை, தேவனுடைய சிருஷ்டிக்கும் வேலை முழு மையானது. அவருடைய கிரியைகள் உலகத்தோற்ற முதல் முடிந்திருந்தும் - எபி. 43. என்றாலும் தமது சிருஷ்டியை தாங்கும்படி அவரது வல்லமை இன்னும் அனுப்பப்படுகிறது. ஒரு முறை இயக் கப்பட்ட இயந்திரம் தனக்குள் இருக்கும் சக்தியினால் தொடர்ந்து செயல்படுகிறது என்பதால் நாடி துடிக்கிறது மூச்சு தொடர்கிறது என்றல்ல; மாறாக, ஒவ்வொரு மூச்சும் இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பும், யாருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக் கிறோமோ (அப். 17:23), அனைத்தையும் வியாபித்துள்ள அவ ருடைய கவனத்தின் சான்றுகளாக இருக்கின்றன. இயற்கையாக அமையப்பெற்றிருக்கும் சக்தியில் வருடாவருடம் பூமி தன் விளை வைத்தந்து சூரியனைச் சுற்றி ஓடி வருகிறது என்றல்ல; தேவனுடைய கரம் கோள்களை வழிநடத்தி, வானங்களிலே அவைகளின் முறையான அணிவகுப்பை அதனதன் இடத்தில் வைக்கிறது. அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகாபெலத்தினாலும், அவருடைய மகாவல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது. ஏசாயா 40:26. அவருடைய வல்லமையால் தாவர இனங்கள் செழிக்கின்றன. இலைகள் தோன்றி பூக்கள் மலர்கின்றன. அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். சங் 1478. அவராலே பள்ளத்தாக்குகள் கனிதருகின்றன. சகல் காட்டு ஜீவன்களும் ..... தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும். அனைத்து உயிரினங்களும் மிகச்சிறிய பூச்சியிலிருந்து மனிதன் வரை அவருடைய ஏற்பாடு செய்யும் கவனிப்பையே அனுதினமும் சார்ந்து இருக்கின்றன. சங்கீதக்காரனின் அழகான வார்த்தைகளில் : அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர் கொடுக்க, அவைகள் வாங் கிக்கொள்ளும் ; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன் மையால் திருப்தியாகும். சங். 104:20, 21, 27, 28. அவருடைய வார்த்தை தனிமங்களைக் கட்டுப்படுத்துகிறது. அவர்வானங்களை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்துகிறார். பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார். சங்.147:16, அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடை யாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். எரே 10:13.PPTam 119.1

    தேவனே அனைத்திற்கும் அஸ்திபாரமானவர். மெய்யான அனைத்து அறிவியலும் அவருடைய கிரியைகளோடு இணக்க மாயிருக்கின்றன. அனைத்து மெய்யான கல்வியும் அவருடைய அரசாங்கத்திற்கு கீழ்ப்படியவே நடத்துகின்றது. அறிவியல் நமது பார்வைக்கு புதிய ஆச்சரியங்களை திறக்கிறது. அது உயர எழுந்து புதிய ஆழங்களை ஆராய்கிறது. என்றாலும் தெய்வீக வெளிப்படுத் தல்களுக்கு முரணான எதையும் தன் ஆராய்ச்சியிலிருந்து கொண்டு வருவதில்லை. அறிவியலுக்கு முறையிடுவதின் மூலம் தேவனைக் குறித்த தவறான கண்ணோட்டத்திற்கு அறியாமை ஆதரவு தேட லாம். ஆனால் இயற்கையின் புத்தகமும் எழுதப்பட்ட வார்த்தை களும் ஒன்றின் மேல் ஒன்று வெளிச்சம் காட்டுகின்றன. நாம் இவ்வாறாக சிருஷ்டிகரை போற்றவும், அவருடைய வார்த்தையின் மேல் அறிவுள்ள நம்பிக்கையை வைக்கவும் நடத்தப்படுகிறோம்.PPTam 120.1

    எல்லையற்றவரின் இருப்பையோ, வல்லமையையோ, ஞானத்தையோ, செயல்களையோ, எந்த எல்லையுள்ள மனதாலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. பரிசுத்த எழுத்தாளன். தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்ல வருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? அதுவான பரியந்தம் உயர்ந்தது, உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழ மானது, நீர் அறியக்கூடியது என்ன? அதின் அளவு பூமியைப் பார்க் கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது (யோபு 117- 9) என்று சொல்லுகிறான். பூமியின் மிக வல்லமையான அறிவும் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது. மனிதர் எப்போ துமே ஆராய்ந்து கொண்டும் கற்றுக்கொண்டும் இருக்கலாம். என்றாலும் அதற்கும் அப்பால் ஒரு நித்தியம் இருக்கிறது.PPTam 120.2

    என்றாலும் சிருஷ்டிப்பின் கிரியைகள் தேவனுடைய வல்ல மைக்கும் மேன்மைக்கும் சாட்சி பகருகிறது. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. சங் 19:1. எழுதப்பட்டிருக்கிற வார்த்தையை தங்களுடைய ஆலோசகராக எடுத்துக் கொள்ளுகிறவர்கள், தேவனை அறிந்து கொள்ள அறிவியலில் ஒரு உதவியைப் பெறுகின்றனர். காணப்படாதவைகளாகிய அவ ருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக் கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும் ரோமர் 1:20.PPTam 121.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents