Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    யுகங்களின் நெருக்கடி நிலை

    யுகங்களின் நெருக்கடிமிக்க ஒரு காலக்கட்டத்தில் நாம் நிற்கிறோம். போர், இரத்தம் சிந்துதல், கூடவே அக்கினி, வெள்ளம், பூமியதிர்ச்சி என தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் அடுக்கடுக்காக நிகழப்போகின்றன. இக்காலத்தின் கொடிய, நிச்சயமான நிகழ்வுகளைக் கண்டு நாம் ஆச்சரியமடையக்கூடாது. மனந்திருந்தாதவர்களைப் பாதுகாக்கும்படி இரக்கத்தின் தூதனால் இனியும் பொறுத்திருக்கமுடியாது. 3PK, p. 278TamChS 72.2

    இந்த நெருக்கடி நிலை சத்தமின்றி நம்மை நெருங்கிவருகிறது. சூரியன் எப்போதும்போல வானத்தில் ஒளி வீசுகிறது, வானங்கள் தேவனுடைய மகிமையை அறிவிக்கின்றன. மனிதர்கள் புசித்தும் குடித்தும், நாட்டியும் கட்டியும்,பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். வியாபாரிகள் விற்றும் வாங்கியும் வருகிறார்கள். முதலிடத்தைத் தேடி மனிதர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு முன்னேறுகிறார்கள். சிற்றின்பப்பிரியர்கள் இன்னும் திரையரங்குகளுக்கும் குதிரைப்பந்தயங்களுக்கும் சூதாட்ட நகரங்களுக்கும் படையெடுக்கிறார்கள். உச்சக்கட்ட பூரிப்பில் எங்கும் மக்கள் நிலைத்திருக்கும்போது, தவணைக்காலம் வேகமாக முடிவைநோக்கி நகருகிறது. ஒவ்வொருவரின் வழக்கும் நித்தியமாகத் தீர்க்கப்படப் போகிறது. கொஞ்சக்காலம் மாத்திரமே இருப்பதை சாத்தான் காண்கிறான். மனிதர்களை வஞ்சிக்கவும் ஏமாற்றவும் முற்றிலும் ஆக்கிரமித்திருக்கவுப் பார்க்கிறான் சாத்தான்; தவணைக் காலம் முடிந்து, இரக்கத்தின் கதவு நித்தியமாகப் பூட்டப்படும் வரையிலும் அவர்களை மயக்க நிலையிலேயே வைத்திருக்க, சாத்தான் தன் முகவர்களை எல்லாம் களத்தில் இறக்கியுள்ளான். 1SW, Oct. 3, 1905TamChS 72.3

    அக்கிரமம் கிட்டத்தட்ட அதன் வரம்பை எட்டிவிட்டது. குழப்பம் உலகில் நிறைந்துவருகிறது, மிகப்பெரிய பயங்கரம் சீக்கிரமே மனிதர்கள்மேல் உண்டாகவிருக்கிறது. முடிவு மிகசமீபம். சத்தியத்தை அறிந்திருக்கிற நாம், எதிர்பாராமல் உலகத்தை வியப்பில் ஆழ்த்தப்போகிற நம்மை நெருங்கியுள்ள நிகழ்வுக்காக ஆயத்தமாக இருக்கவேண்டும். 28T, 28TamChS 73.1

    இக்காலத்தில் அக்கிரமம் பெருகியிருப்பதால், கடைசி நெருக்கடி நிலை நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ளலாம். தேவபிரமாணத்திற்கு எதிர்த்து நிற்கும் நிலை எங்கும் காணப்படும்போது, அவருடைய மக்களை சகமனிதர்களே ஒடுக்கி,வேதனைப்படுத்தும் போது, தேவன் தலையிடுவார். 3COL, p. 178TamChS 73.2

    பெரிதும் முக்கியமுமான நிகழ்வுகள் நிகழ்கிற ஒரு காலக்கட்டத்தில் நாம் நிற்கிறோம். தீர்க்க தரிசனங்கள் நிறைவேறி வருகின்றன. குறிப்பிடத்தக்க, விநோதமான நிகழ்வுகள் பரலோகப் புத்தகங்களில் பதியப்பட்டு வருகின்றன. நம் உலகில் எல்லாமே ஒரு கொதிப்பு நிலையில்தான் உள்ளது. ஜாதிகள் கோபித்தார்கள்; மரித்தோர் நியாயத்தீர்க்கப்படுகிற காலம் வந்தது. தேவனுடைய நாளை சமீபிக்கும்படி மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. முன்பு இருந்ததுபோல, இப்போதும் கொஞ்சநேரமே உள்ளது. ஏற்கனவே தேசத்திற்கு விரோதமாக தேசமும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பிவருகிற நிலையில், பொதுவான ஈடுபாடு எங்கும் காணப்படவில்லை. தேவபிள்ளைகளுடைய நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் நான்குதிசைக்காற்றுகளும் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு பூலோக வல்லமைகள் கடைசி மகா யுத்தத்திற்கு தங்கள் படைகளை அணிவகுத்து அனுப்பும். 16T, 14TamChS 73.3