Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாயிருத்தல்

    பரலோகத்திற்கடுத்த காரியங்களைக் குறித்து ஆழ்ந்து தியானிப்பதில் தற்போது நாம் மகிழ்ச்சி காணாவிட்டால், தேவனைப்பற்றிய அறிவைத்தேடுவதில் நமக்கு ஆர்வம் இல்லையென்றால், கிறிஸ்துவின் குணத்தை நோக்கிப்பார்ப்பதில் மகிழ்ச்சி இல்லையென்றால், பரிசுத்தம் நமக்கு கவர்ச்சியான காரியமாகத் தோன்றவில்லையென்றால் - நமது பரலோகத்தின் நம்பிக்கை வீணாக இருக்கும் என்பதில் நாம் நிச்சிய முள்ளவர்களாக இருக்கலாம். தேவனுடைய சித்தத்திற்கு முழுவதும் உடன்படுவது, கிறிஸ்துவனுக்கு முன்பாக தொடர்ச்சியான உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும். அவன் தேவனைக்குறித்தும், இயேசுவைக்குறித்தும், தன்னை நேசிப்பவர்களுக்காக கிறிஸ்து ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் மகிழ்ச்சியான தூய்மையான இல்லத்தைக் குறித்தும் பேசுவதற்கு விருப்பப்படுவான். தேவனுடைய பாக்கியமான நம்பிக்கைகளின்மீது ஆத்துமா திளைத்து மகிழ்ந்து இந்தப் பொருள்களைக் குறித்துத் தியானிப்பது, வரப்போகும் உலகத்தின் வல்லமைகளை ருசிப்பார்ப்பதற்கு ஒத்தது என்று அப்போஸ்தலர் எடுத்துரைக்கின்றார். - 5T 745 (1889).கச 53.2

    இன்றைக்கு நீ தேவனுடைய சரியாக இருந்தால், கிறிஸ்து இன்றைக்கு வந்தாலும் நீ ஆயத்தமாக இருப்பாய். - HP 227 (1891). கச 53.3

    *****