Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இன்றைக்கு தேவன் கொடுக்கும் சிறப்புமிகுந்த ஓர் தூது! , ஏப்ரல் 9

    “இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.” - ரோமர் 13:12Mar 197.1

    இதைப்போன்ற ஒரு நேரத்தில், நமது எண்னத்தில் ஒரே ஒரு நோக்கம்மட்டுமே இருக்கவேண்டும். மனிதரின் மனதிலே சத்தியம் நிலைநாட்டப்படத்தக்கதாக, தேவன் நமக்கு வழங்கியிருக்கிற அனைத்து வழிவகைகளையும், பொருளாதாரத்தையும் பயன்படுத்த வேண்டும்… சத்தியத்தின் அறிவை எங்கனும் பரவச் செய்வதற்காக, ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனது ஆற்றலின் உச்சகட்ட நிலை அளவிற்கு, முயற்சிசெய்யவேண்டியது அவனது கடமையாக இருக்கிறது.Mar 197.2

    தேவன் நீண்டகாலம் காத்திருந்துவிட்டார். படைப்பினாலும் மீட்பினாலும் அவருக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறவர்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறார்; மேலும் வருடைய சத்தத்திற்குச் செவிசாய்த்து, அவரது அன்பான பணிவுள்ள பிள்ளைகளாக அவருக்குக் கீழ்படிந்து, அவருக்கு அருகில் இருப்பதை விருப்பமாகக்கொண்டு, அவர்கள்மீது அவரது முகத்தின் ஒளியானது பிரகாசிக்கத்தக்கதாக இருக்கின்ற அந்தப் பிள்ளைகளுக்காக, அவர் இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறார். நாம் மூன்றாம் தூதனின் தூதை உலகத்திற்கு எடுத்துச் சென்று, மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குவதற்கு எதிராக மனிதருக்கு எச்சரிப்பைக்கொடுத்து, ” தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும்” காத்துக்கொள்ளுகிறவர்களுடைய அந்த வரிசையிலே, அவர்கள் இடங்களைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, அவர்களை நடத்த வேண்டும். இந்தத் தூது எப்பொழுது முடிவடையும் அல்லது தவணையின் காலம் எப்பொழுது முடிவடையும் என்பது குறித்து அதற்கான நேரத்தை நமக்கு தேவன் வெளிப்படுத்தவில்லை... விழிப்போடு உழைத்து, காத்திருந்து, அழிவிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற மனிதர்களின் ஆத்துமாக்களுக்காக, ஒவ்வொரு கணமும் உழைக்கவேண்டியது நமது கடமையாகும்….Mar 197.3

    இப்பொழுது, இப்பொழுதேதான், நாம் விழிப்புள்ளவர்களாக உழைத்துக் காத்திருக்கவேண்டிய நேரமாகும்… அனைத்துக் காரியங்களின் முடிவும் சமீபித்துவிட்டது… கிறிஸ்துவின் பின்னடியார்களென்று சொல்லிக்கொள்பவர்கள், மற்றவர்களுக்கு கொடுக்கத் தக்கதான ஒரு பரிசுத்தமான — புனிதமான — மகிழ்ச்சியை உடையவர்களாக இருக்கத்தக்கதாக, ஆண்டவரின் ஆவியானவரால் அருளப்பட்ட வார்த்தையின் சத்தியத்தை எடுத்து ஆத்துமாவிலே முத்திரையிடுகிறார்…Mar 198.1

    சத்தியத்தின் வல்லமையிலே ஒரு ஆழமான — ஆற்றல் நிறைந்த — அதிகமாக நெருக்கி ஏவுகின்ற — சாட்சியானது அவசியமாக இருக்கிறது. இத்தகைய சாட்சியானது இதை நம்புகிறோம் என்று சொல்லுகிறவர்களுடைய நடைமுறையிலிருக்கும் கடவுட்பற்றிலே காணப்படுகிறது. சத்தியமானது நமது இதயங்களிலே நிலை நாட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த சத்தியம் இயேசுவில் எவ்வாறு காணப்படுகின்றதோ, அதேபோன்று மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும். உலகமானது மிகவும் பக்திவிநயமான ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறது; ஏனெனில்,ல் தங்களது நித்தியத்திற்கான முடிவு என்னவாயிருக்கும் என்று ஆத்துமாக்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய நியாயப்பிரமாணத்தைச் செல்லுபடியாகாமல் செய்வதற்காக, சாத்தானும் அவனுடைய தூதர்களும் தொடர்ந்து மறைவானவிதத்தில் சூழ்ச்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். பாவத்தின் கொடுமையிலே மனிதரின் ஆத்துமாக்களை அடிமைப்படுத்த இவ்வாறு முயற்சிக்கிறார்கள். பூமியை மூடியிருக்கிற இருள் இன்னும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. தேவனிடத்தில் தாழ்மையாக நடப்பவர்கள் பயப்படத் தேவையில்லை.Mar 198.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 198.3

    “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்…” - ஏசாயா 60:2.Mar 198.4