Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பொய்யான எழுப்புதல்!, ஜூன் 9

    “நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்...” - 2 தெசலோனிக்கேயர் 2:8,9.Mar 319.1

    பவுலார் தெசலோனிக்கேயருக்கு எழுதிய தமது இரண்டாம் நிரூபத்திலே, ஆவிமார்க்கத்தில் சாத்தான் ஒரு தனி முனைப்புடன் செய்யும் வேலையைக்குறித்து நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இந்தச் சம்பவமானது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு சற்றுமுன்பாக நடைபெறவிருக்கின்ற ஒரு சம்பவம் என்றும் கூறுகிறார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றி அவர் எழுதும்போது, அவர் உறுதிபடப் பின்வருமாறு கூறுகின்றார்: “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி, சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் இருக்கும்”-2 தெச. 2:9.Mar 319.2

    பூமியின்மீது தேவன் கொடுக்கப்போகும் தண்டனைகள் இறுதியாக வந்துசேரும்பொழுது, ஆண்டவரது மக்களுக்கு மத்தியிலே அப்போஸ்தலர் காலத்திலிருந்து இதுவரை காணப்படாத அளவிற்கு, முற்பட்ட காலத்தில் காணப்பட்ட தேவ பக்தியின் ஒருவித எழுப்புதல் காணப்படும். தேவனுடைய வல்லமையும் ஆவியும் அவரது மக்கள் மீது பொழியப்படும். தேவன்மீதும் அவரது வார்த்தையின்மீதும் கொண்டுள்ள அன்பானது அகற்றப்பட்டு, இந்த உலகத்தின்மீது கொண்டுள்ள அன்பானது நிலைபெற்றிருக்கின்ற சபைகளைவிட்டு விலகிக்கொள்வார்கள். ஆண்டவரது வருகைக்காக ஒரு கூட்டம் மக்களை ஆயத்தஞ்செய்யவேண்டிய இச்சமயத்தில், கூறியறிவிக்கப் படவேண்டும் என்று தேவன் நியமித்திருக்கிற, அந்த மாபெரும் சத்தியங்களை அநேக ஊழியர்களும் மக்களும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆத்துமாக்களின் விரோதி இந்த வேலையைத் தடைசெய்ய விரும்புகிறான். இத்தகைய இயக்கத்திற்கான ஒரு நேரம் வருவதற்கு முன்பாக, அதைத்தடுக்க தீவிர முயற்சியோடு ஒரு போலியை அறிமுகப்படுத்துவான். தனது வஞ்சக வல்லமைக்கடியில் கொண்டுவரப்படக்கூடிய சபைகளிலே, தேவனுடைய விசேஷ வல்லமை பொழியப்பட்டதுபோன்ற ஒரு தோற்றத்தைக்காட்டுவான். மார்க்க சம்பந்தமான காரியங்களில் மாபெரும் ஆர்வம் எழும்பி இருப்பதுபோன்று நினைக்கத்தக்கதாக, வெளிப்படையான காரியங்களைக் காட்டுவான். திரளான கூட்டத்தால் தங்களுக்கு தேவன் அற்புதமான முறையில் கிரியைசெய்துகொண்டிருக்கிறார் என்று ஏக்களிப்பார்கள்; ஆனால், அக்காரியமானது வேறே ஆவியினால் நடப்பிக்கப்படுகிறதாக இருக்கும். மார்க்க சம்பந்தமான மாருவேடத்திற்கடியில், கிறிஸ்தவ உலகம் முழுவதிலும், தனது செல்வாக்கைப் பரப்பிட முயற்சிசெய்வான்.Mar 319.3

    வாலிப ஆண்களும், பெண்களும் எழுசியடைவார்கள். அதிசயமான விதத்தில் தங்களுக்காக ஆதரவு கொடுக்கப்பட்டது என்றும், தாங்கள் ஒரு மாபெரும் பணியைச் செய்யும்படி அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் எண்ணுவார்கள். வழக்கத்திற்கு மாறான ஒரு ஒழுங்கின்படி, அநேகருக்கு மனந்திரும்புதல்கள் ஏற்படும்; ஆனால், இந்த மனந்திரும்புதல்கள் தெய்வீக கையொப்பத்தைப் பெற்றவைகள் அல்ல, பாலியல் தொடர்பான ஒழுக்கக்கேடுகளும் ஆடம்பரச் செலவுகளும் வந்துசேரும். அநேகருடைய விசுவாசம் அழிந்தொழிந்துபோகும்.⋆Mar 320.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 320.2

    “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.” - சங்கீதம் 119:165. Mar 320.3