Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தெய்வீக உதவியைப்பற்றிய வாக்குத்தத்தம்!, செப்டம்பர் 4

    “அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேச வேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.” - மத்தேயு 10:19.Mar 493.1

    தங்கள் விசுவாசத்தைக்குறித்து விசாரிக்கப்படும்போது, எதைப்பேசவேண்டுமென்று கிறிஸ்துவின் ஊழியக்காரர் ஆயத்தம் செய்யப்படபிரசங்கத்தோடு அங்கு நிற்கதேவயில்லை. மாறாக, அவர்களுடைய ஆயத்தமானது, ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டும். தேவனுடைய விலைமதிப்புள்ள வார்த்தைகளை தங்கள் இதயத்திலே சேர்த்துவைத்தும், கிறிஸ்துவின் உபதேசங்களை தியானித்தும், ஜெபத்த்தின்மூலமாக விசுவாசத்தைப்பலப்படுத்தியும் ஒவ்வொரு நாளும் ஆயத்தப்பட வேண்டும். அப்படிச் செய்வார்களானால், விசாரணைக்காக அழைத்துவரப்படும்பொழுது, அந்த சாட்சியைக்கேட்க வருகின்ற உள்ளங்களைத் தொடக்கூடிய சத்தியங்களை பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய நினைவிற்கு கொண்டுவருவார். கவனமாக வேதத்தை ஆராய்ந்த்தின் மூலம் பெற்றுக்கொண்ட அறிவை, எந்த நேரத்தில் தேவைப்படுகிறதோ அந்த நேரத்தில் தானே, பளிச்சென்று அவர்கள் நினைவிற்கு கொண்டுவருவார்.Mar 493.2

    நீங்கள் இப்போது சோதனையின் காலத்திற்கு ஆயத்தப்பட வேண்டும்; உங்கள் கால்கள் நித்திய கன்மலையின்மேல் நாட்டப்பட்டிருக்கிறதா என்பதை நீங்கள் அறிய வேண்டும்; உங்களுடைய வெளிச்சத்திற்காக மற்றவர்களை சார்ந்திராமல், உங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அனுபவம் இருக்க வேண்டும். நீங்கள் சோதனைக்குள் கொண்டுவரப்படுகிறபொழுது, தனித்து விடப்படமாட்டீர்களென்பது எப்படை உங்களுக்குத் தெரியும்? பூலோக நண்பன் எவரும் உங்களுக்கருகில் இல்லாமலைருக்கலாம். கிறிஸ்து உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதை உங்களால் நன்றாக உணர்ந்துகொள்ள முடியுமா? “இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்ற கிறிஸ்துவின் வாக்குதத்தத்தை உங்களால் நினைவிற்குக் கொண்டுவர முடியுமா? உங்களை அழித்தேவிட வேண்டுமென்ற குறிக்கோளோடு, கண்ணிற்கு மறைவாக யிருக்கும் அநேகர் உங்களைச் சுற்றிலும் இருப்பார்கள். நீங்கள், தேவனுக்கும் அவருடைய சத்தியத்திற்கும் உறுதியாக நிற்காமல், தடுமாற்றம் அடையத்தக்கதாக, சாத்தானும் அவனுடைய தூதர்களும் அனைத்து வழிகளிலும் முயற்சிசெய்வார்கள்; என்றாலும், உங்கள் கவனம் முழுவதும் தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருவதில் நிலைத்திருக்குமானால், எப்படி சத்தியத்திற்காக சாட்சி சொல்லப்போகிறோம் என்று கவலைப்படத் தேவையில்லை.Mar 493.3

    வாலிப சகோதர்ர்களே-சகோதரிகளே! நெருக்கடியான காலக்கட்டம் வருகிறபோது, உங்களுடைய வல்லமையின் உறைவிடமாகிய கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்துவிடாதபடிக்கு, அவருக்குள் முழுமையாக வளர்ந்து கொண்டிருக்கிறீர்களா? அந்தச் சோதனையின் காலத்திலே நாம் நிற்க வேண்டுமானால், இந்த சமாதான காலத்திலே, தேவனுக்கடுத்த காரியங்களிலே, ஒரு ஜீவனுள்ள அனுபவத்தை நாம் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தேவ ஆவியானவர் ஆழமாக அசைவாடுவதைப் புரிந்துகொள்ள, நாம் இப்பொழுது கற்றுகொள்ள வேண்டும். கிறிஸ்து மாத்திரமே நமக்கு எல்லாவற்றிலும் எல்லாமாக, அல்பாவாகவும்-ஒமேகாவாகவும், முதலும்- கடைசியுமாகவும், ஆதியும்-அந்தமுமாகவும் இருக்க வேண்டும்.⋆Mar 494.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 494.2

    “ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” - தானியேல் 12:3.Mar 494.3