Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய சபை விழுந்துபோய்விடுவது போன்று காணப்படுதல்!, ஜூலை 14

    “சியோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறான். ஸ்திரீயானவன் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.” - ஏசாயா 49:14,15.Mar 389.1

    சாத்தான் மக்களை ஏமாற்றுவதற்காக அவனுடைய அற்புதங்களைச் செய்வான். தனது வல்லமையை மிகவும் உயர்வானதாக நிலை நிறுத்திவைப்பான், சபை விழுந்துவிடுவதுபோல் தோன்றும்; ஆனால், அது விழுகிறதில்லை; அதாவது, சீயோனிலுள்ள பாவிகள் சலித்து வெளியேற்றப்படும்வரை சபை நிற்கும்; அருமையான கோதுமையினின்று உமி அகற்றப்படும். இது ஒரு பயங்கரமான சோதனை; எனினும், இது நடைபெற்றாக வேண்டும். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், சாட்சிகள் வசனத்தினாலும் மேற்கொண்டவர்கள், பாவக் கரைதிரையின்றி, அவர்களது வாய்களிலே கபடமின்றி, உத்தமமும் உண்மையுமான மக்களோடு காணப்படுவார்கள். வேறு எவருக்கும் அங்கு இடமில்லை... சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தங்களது ஆத்துமாக்களை தூய்மைப்படுத்திக்கொண்ட மீதியானவர்கள், அந்த இக்கட்டு நிறைந்த வழிமுறையின் மூலமாகப் பலனடைந்து, சுற்றிலும் காணப்படுகின்ற மருள விழுகைக்கு மத்தியில், தங்களது பரிசுத்த அழகை வெளிப்படுத்திக்காட்டுவார்கள்.Mar 389.2

    ஆண்டவர் நமது சபையை நேசிக்கிறார் என்பதை நான் அறிவேன். இந்த சபையானது தனித்தனி சிறிய குழுக்களாக சிதறடிக்கப்படவோ அல்லது அதின் ஒழுங்கு குலைக்கப்படவோ கூடாது; ஏனெனில், இதில் கொஞ்சங்கூட நிலைத்திருக்கும் தன்மை இல்லை; மேலும், இப்படிப்பட்ட ஒரு காரியம் நடக்கும் என்பதற்கான ஒரு சிறிதளவு ஆதாரமுமில்லை. இத்தகைய பொய்யான செய்தியைக்கேட்டு, மற்றவர்களையும் கெடுக்க நினைக்கிறவர்கள் ஏமாற்றப்படுவார்கள். மேலும் அதிகமான எமற்றங்களைச் சந்திக்க அவர்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும். அவர்கள் ஒன்றுமில்லாமற்போய்விடுவார்கள்.Mar 389.3

    இஸ்ரேவேலின் தேவன் இன்னும் அவர்களை நடத்திவருகிறார். முடிவுபரியந்தமும் அவர்களோடு தொடர்ந்து இருப்பார் என்ற காரியத்தை நான் தெளிவாக விளங்கிக்கொள்ளும்போது, நாம் தைரியப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகிறேன்.Mar 390.1

    இப்பொழுது தேவன் நிலைநாட்டியிருக்கிற அடித்தளத்தினின்று இறங்கி வெளியே செல்லக்கூடாது. அமைக்கப்பட்ட எந்த புதிய நிறுவனங்களுக்குள்ளும் நாம் பிரவேசிக்ககக்கூடாது. சத்தியத்தினின்று மருளவிழுந்துவிட்டோம் என்பதே இதன் பொருளாகும்.Mar 390.2

    சபையானது தனது மிகக் கடுமையான போராட்டத்திற்குள் வெகுசீக்கிரத்தில் பிரவேசிக்கவிருக்கிறது. பூமியிலே, தேவனுக்கு மிகவும் பிரியமானது என்று ஒன்று உண்டானால்-அது அவரது சபையே! அடித்தளத்தினின்று தீமையின் கூட்டமைப்பானது வல்லமையோடு கிளர்ந்தெழும். சாத்தான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்மீது எல்லாவித அவதூறுகளையும் சுமத்துவான். அவனது சாத்தானிய கண்டுபிடிப்புகளாலும், பொய்யான காரியங்களாலும் அவர்களை ஏமாற்றவோ வஞ்சிக்கவோ முடியாது; ஆனால், “இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகாரகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்.”-- அப்போஸ்தவர் 5:31: இவ்வாறு உயர்த்தப்பட்ட கிறிஸ்துவே நமது தலைவரும் பிரிதிநிதியுமானவர். அவர் தமது இதயத்தை அடைத்துக்கொள்வாரா? அல்லது தமது கரத்தை விளக்கிக்கொள்வாரா? அல்லது அவரது வக்குத்தத்தத்தைப் பொய்யாக்கிப்போடுவாரா? அல்ல; ஒருபோதும் அவர் அப்படிச் செய்யமாட்டார்.⋆Mar 390.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 390.4

    “நீதிமான்கள் கூப்பிடும்போது, கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.” - சங்கீதம் 34:17.Mar 390.5