Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அனைத்துப் பக்கங்களிலுமிருந்தும் உபத்திரவங்கள்!, ஜனவரி 29

    “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” - செப்பானியா 2:3.Mar 57.1

    இயேசுவின் இரத்தத்தினால் விலைக்கிரயமாக வாங்கப்பட்டவர்கள்... சுவிசேஷத்தில்தங்களுக்கு கிருபையாக அனுப்பப்பட்ட தூதுகளை ஏளனஞ்செய்யத் தக்கதான நிலையை அடைந்து, கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலித்து, எல்லைக்குட்பட்ட தங்களது சொந்த பகுத்தறிவின்மீதும், அடித்தளமில்லாத விவாதங்கள் மீதும், நம்பிக்கை வைத்திருப்பதைக் காண்பதைவிட, மிகவும் துக்கமான வேறொரு காட்சி கிடையாது. துன்பத் துயரங்களினால் சோதிக்கப்படும்போது, மரணத்தை முகமுகமாகச் சந்திக்கும் நிலைக்குக் கொண்டுவரப்படும் பொழுது, அவர்கள் இதுவரை நெஞ்சார நேசித்த தவறான வாதங்களெல்லாம், சூரியனுக்கு முன்னர் இருக்கும் உறைபனிபோன்று, உருகி ஓடிப்போகும்.Mar 57.2

    தெய்வீக இரக்கத்தின் வேண்டுகோள்களை தள்ளிப்போட்ட ஒருவரை வைத்திருக்கும் சவப்பெட்டிக்கு முன்பாக நிற்பது எவ்வளவு பயங்கரமான ஒரு காரியம்! நித்தியத்தை இழந்துபோன ஒருவன் என்று சொல்வது எவ்வளவு பயங்கரமானது! உன்னத நிலையை எட்டிப்பிடித்து, நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டிய தகுதிக்கு வந்திருக்க வேண்டியவர் - அவர்; ஆனால், அவர் தமது வாழ்வை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்து, மனிதரின் வீணான தத்துவங்கள் என்ற கண்ணியில் அகப்பட்டு, தீயவனின் கரங்களிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருளாகிவிட்டார்! கிறிஸ்தவனின் நம்பிக்கையானது, ஆத்துமாவிற்கு நங்கூரமாயிருக்கிறது. அது நிச்சயமானதும், நிலையானதுமாக இருக்கிறது. நமக்காக; நமது முன்னோடியாகிய கிறிஸ்து திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். அந்த இடத்திற்கு இந்த நம்பிக்கை செல்லுகிறது. நமக்கு முன்னாக இருக்கும் அந்த மாபெரும் சம்பவங்களை சந்திக்கும்படி ஆயத்தமாகத்தக்கதாக, நாம் செய்யவேண்டிய தனிப்பட்ட வேலை ஒன்று உண்டு.Mar 57.3

    வாலிபர்கள் அதிக ஊக்கத்தோடு தேவனைத் தேடவேண்டும். புயல் வந்து கொண்டிருக்கிறது. பாவத்தைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைத்தவர்களாக அந்தப் புயலின் சீற்றத்தைச் சந்திக்க நாம் ஆயத்தமாக வேண்டும். ஆண்டவர் இந்த பூமியை பயங்கரமாக அசைக்கத்தக்கதாக எழும்புவார். எல்லாப் பக்கங்களிலிருந்தும் இன்னல்கள் எழும்புவதைக் காணலாம். ஆயிரக்கணக்கான கப்பல்கள் கடலின் ஆழத்திற்குள் அமிழ்ந்துபோகத்தக்கதாக தூக்கி எறியப்படும். கப்பற்படைகள் அமிழ்ந்துபோகும். இலட்சக்கணக்கான மக்கள் பலியாவார்கள். எதிர்பாராதவிதத்தில் நெருப்புகள் பற்றிஎரியும். எந்தவிதமான மானிட முயற்சியாலும் அவைகளை அணைத்துவிட முடியாது. நெருப்பின் கோரத்தாண்டவத்தால், இவ்வுலகிலுள்ள அரண்மனைகள் அழிக்கப்பட்டு, இல்லாமற் போய்விடும். இரயில் விபத்துகளினால் அடிக்கடி அழிவு ஏற்படும். குழப்பம், கடும் மோதல்கள், ஒரு கணநேர எச்சரிப்புமின்றி நடக்கும் மரணங்கள் ஆகியவை மிகப் பெரிய பிரயாண வழித்தடங்களில் ஏற்படும். முடிவு சமீபம், தவணையின் காலம் முடிவடைந்துகொண்டிருக்கிறது. ஆ! தேவனை கண்டடையத்தக்க சமயத்தில் நாம் தேடுவோமாக. அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுவோமாக.Mar 58.1

    “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒரு வேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” - செப்பனியா 2:3.⋆Mar 58.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 58.3

    “...நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.” - எரேமியா 4:1.Mar 58.4