Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தவறு செய்யாத ஒரு வழிகாட்டி!, பிப்ரவரி 5

    “...நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.” - யாக்கோபு 1:22.Mar 71.1

    தேவன் தமது சித்தத்தை அறிந்தவர்களை அவருடைய வார்த்தையின்படிச் செய்கிறவர்களாக இருக்கும்படி அழைக்கிறார். பலவீனம், அரைகுறையான மனம், தீர்மானமெடுப்பதில் தயக்கம் ஆகியவைகள் சாத்தானின் தாக்குதலகளைத் தூண்டுகிறதாயிருக்கிறது. இந்த இயல்புகளை வளர அனுமதிப்போர், சோதனையின் மாபெரும் அலைகளால் எத்தகைய உதவியுமின்றி அடித்துச் செல்லப்படுவர். கிறிஸ்துவின் நாமத்தை உரிமைகொண்டாடும் ஒவ்வொருவரும் கிறிஸ்தவனின் ஜீவனுள்ள தலையாக இருக்கும்படியாக, கிறிஸ்துவின் முழு வளர்ச்சியை எட்டவேண்டியது அவசியமாயிருக்கிறது.Mar 71.2

    மணல்திட்டு, அல்லது பாறைகள் நிறைந்த நதியில் ஒரு கப்பல் பயணிக்கு எவ்வாறு மாலுமி அவசியாமயிருக்கிறாரோ, அவ்வாறே நம் அனைவருக்கும் வாழ்வின் நெருக்கமான அநேக இடங்களினூடாக கடந்து செல்வதற்கு ஒரு வழிகாட்டி அவசியப்படுகிறார். இத்தகைய வழிகாட்டியை எங்கே கண்டுபிடிப்பது? வேதத்தையே... நாங்கள் உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம். தேவனால் ஏவப்பட்டு, பரிசுத்த மனிதர்களால் எழுதப்பட்டு, அது முதியோர்களும் இளைஞர்களும் செய்யவேண்டியதை மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் சுட்டிக்காட்டுகிறது. அது சிந்தனையை உயர்த்தி, இருதயத்தை மென்மைப்படுத்தி, ஆவிக்கு மகிழ்ச்சியையும் பரிசுத்தமான சந்தோஷத்தையும் வழங்குகிறது. பூரணமான, உயர்ந்த தன்மையுள்ள குணாதிசயங்களை வேதம் வழங்குகிறது. அது வாழ்க்கைப் பயணத்தின் முடிவுபரியந்தமும், எல்லா சூழ்நிலைகளும் நிச்சயமான வழிகாட்டியாக இருக்கிறது. உங்களது ஆலோசகராகவும், உங்கள் அன்றாட வாழ்க்கையின் சட்டதிட்டங்களாகவும் அதை எடுத்துக்கொள்ளுங்கள்...Mar 71.3

    தேவாக்கியங்களில் ஆயிரமாயிரம் முத்துக்களும் சத்தியங்களும் மேலோட்டமாகத் தோடுவோருக்குப் புலப்படாமல் மறைந்துகிடக்கின்றன. சத்தியத்தின் சுரங்கம் ஒருக்காலும் தீர்ந்துபோவதில்லை. தாழ்மையான இருதயத்துடன் நீங்கள் வேதத்தில் எவ்வளவிற்கு அதிகமாக ஆர்வத்தோடு தேடுகிறீர்களோ, அவ்வளவிற்கு அதிகமாக அதில் நாட்டங்கொண்டு, “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” என்று பவுலுடன் சேர்ந்து ஆச்சரியப்படவேண்டியதுபோல் எண்ணுவீர்கள்.Mar 72.1

    ஒவ்வொரு நாளும் நீங்கள் வேதகமத்திலிருந்து ஏதேனும் புதிதாகத் தெரிந்துகொள்ளவேண்டும். அதில் மறைந்திருக்கும் பொக்கிஷங்களைத் தேடுங்கள்; ஏனெனில், அவைகள் நித்திய ஜீவனுக்கான வார்த்தைகளைக் கொண்டுள்ளது, இந்தப் பரிசுத்த எழுத்துக்களை புரிந்துகொள்வதற்காக ஜெபியுங்கள். நீங்கள் இதைச் செய்வீர்களாகில், தேவனுடைய வார்த்தைகளில் புதிய மகிமைகளைக் கண்டடைவீர்கள்; சத்தியத்தோடு இனணக்கப்பட்ட தலைப்புகள் பற்றிய-எளிதில் பெற்றுக்கொள்ள முடியாத-புதிய ஒளியைப் பெற்றுக்கொண்டதாக உணர்வீர்கள்; மேலும், உங்கள் மதிப்பீட்டில் வேதவாக்கியங்கள் புதிய மதிப்பைத் தவறாமை பெற்றுக்கொண்டேயிருக்கும்...Mar 72.2

    உங்கள் குணம் மாற்றப்படத்தக்கதாகவும், கிறிஸ்து இயேசுவிற்குள் முழுமைபெற்றவைகளாகப் நீங்கள் வளரத்தக்கதாகவும், அவரது கிருபையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள சுறுசுறுப்பும் கவனமும் உள்ளவைகளாக இருங்கள்.Mar 72.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 72.4

    “கர்த்தருடைய புத்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.” - ஏசாயா 34:16Mar 72.5